/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புறவழிச்சாலையுடன் இணைப்பு இல்லாததால் அவதி
/
புறவழிச்சாலையுடன் இணைப்பு இல்லாததால் அவதி
ADDED : டிச 21, 2025 04:32 AM
தினமும் 8 கி.மீ., சுற்றிச் செல்லும் அவலம்
அம்பத்துார்: செ ன்னை புறவழிச்சாலையான பெருங்களத்துார் - புழல் சாலை, 2010ல் பயன்பாட்டிற்கு வந்தது. மொத்தம் 32 கி.மீ., நீளமுடைய இந்த சாலையில், போரூர் மற்றும் சூரப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.
இதில் போரூர் சுங்கச்சாவடி, மதுரவாயல், அம்பத்துார் டெ லிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதிகளில், புறவழிச்சாலையில் இருந்து உட்புற பகுதிகளுக்கு செல்லும் வகையில் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அப்பகுதி வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வருகின்றனர்.
அதேபோல், பட்டரைவாக்கம், பால்பண்ணை சாலை அருகே, புழல் மார்க்கத்தில் செல்லவும், பெருங்களத்துார் மார்க்கத்தில் இருந்து வெளியேறவும் வழி உள்ளது.
ஆனால், புறவழிச்சாலையில் முக்கிய பகுதியாக விளங்கும் மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், புதுார் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், தங்கள் பகுதியில் இருந்து புறவழிச்சாலையில் பயணத்தை மேற்கொள்ள, இணைப்பு அமைக்கப்படவில்லை.
இதனால் அவர்கள், அம்பத்துார் ஓ.டி., அல்லது கருக்கு பிரதான சாலை வழியாக, 8 கி.மீ., கடந்து, அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதிக்கும், சூரப்பட்டு அல்லது அணுகு சாலை வழியாக 7 கி.மீ., கடந்து, புழல் பகுதிக்கும் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதை கருத்தில் கொண்டு, கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள அணுகு சாலையுடன், சென்னை புறவழிச்சாலையின் இரண்டு மார்க்கத்திலும் இணைப்பு ஏற்படுத்தினால், அப்பகுதி வாகன ஓட்டிகள் பெரிதும் பயனடைவர். அவர்களின் பயண நேரம், எரிபொருள் பயன்பாடு குறையும்.

