/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிணற்றில் முதியவர் சடலமாக மீட்பு
/
கிணற்றில் முதியவர் சடலமாக மீட்பு
ADDED : மார் 06, 2024 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆளவந்தார், 68. கண் பார்வை சரியில்லாதவர், கடந்த 3ம் தேதி திடீரென மாயமானார். இதையடுத்து, உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அருகே உள்ள மிட்டாய்காரர் என்பவரின் கிணற்றில் சடலமாக மிதந்தது தெரிய வந்தது.
தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, இவரது மகன் ராஜிவ் காந்தி கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

