sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுவாபுரி கோவில் குளம் சீரைமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை

/

சிறுவாபுரி கோவில் குளம் சீரைமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை

சிறுவாபுரி கோவில் குளம் சீரைமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை

சிறுவாபுரி கோவில் குளம் சீரைமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை


ADDED : அக் 28, 2024 01:34 AM

Google News

ADDED : அக் 28, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பின்புறம் பரந்து விரிந்து காணப்படும் குளம், வரலாற்று சிறப்பு மிக்க குளமாகும்.

அந்த குளத்தை சீரமைக்க, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர் மழை, புயல் போன்ற காரணங்களால் புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் துவங்கப்பட்டன.

குளத்தை ஆழப்படுத்தி, குளத்தின் மத்தியில் நீராழி மண்டபம் நிறுவி படித்துறை அமைத்து, குளத்தை சுற்றி நடைபாதை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விறுவிறு என துவங்கப்பட்ட பணிகள், இடம் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கல்களால் முடங்கின.

அதற்கு தீர்வு ஏற்பட்ட நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் மீண்டும் பணிகள் தொடரப்பட்டன. தற்போது ஆமை வேகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் புதுப்பிப்பு பணிகளில் இழுபறி நீடிக்கிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us