sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நில வகைப்பாடு கோப்புகள் தேக்கம்

/

நில வகைப்பாடு கோப்புகள் தேக்கம்

நில வகைப்பாடு கோப்புகள் தேக்கம்

நில வகைப்பாடு கோப்புகள் தேக்கம்


ADDED : மார் 08, 2024 09:25 PM

Google News

ADDED : மார் 08, 2024 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில், பெரிய அளவிலான மனைப்பிரிவு திட்டங்கள், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் உள்ளது.

இதில் அதிகாரிகளுக்கு அப்பால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் குழும கூட்டத்தில் தான், ஒப்புதல் அளிக்க முடியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தொழில்நுட்ப ஆய்வுகள் முடிந்த பல்வேறு கோப்புகள், இந்த குழும கூட்ட விவாதத்திற்கே செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆவணங்கள் சரியாக உள்ள கோப்புகள், ஒப்புதல் கிடைக்காமல் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில், 50 கோப்புகள் காத்திருக்கின்றன.

இதுகுறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:

மனைப்பிரிவு திட்டங்களை பொறுத்தவரை, பெரும்பாலான கோப்புகளை அதிகாரிகளே முடித்து விடலாம். இதற்கு ஏற்ற வகையில், அதிகாரப் பகிர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, மக்கள் பிரதிநிதிகள் சி.எம்.டி.ஏ., கூட்டத்தில் பங்கேற்க முடியாது.இவர்கள் இல்லாத நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு அதிகாரிகள் கூட்டம் நடத்த முடியாது.

எனவே, தேர்தல் அறிவிக்கை வரும் முன், நிலுவையுள்ள கோப்புகளை முடிக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us