/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நல்லாட்டூரில் நுாலகம் சேதம்: புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை
/
நல்லாட்டூரில் நுாலகம் சேதம்: புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை
நல்லாட்டூரில் நுாலகம் சேதம்: புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை
நல்லாட்டூரில் நுாலகம் சேதம்: புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை
ADDED : டிச 16, 2025 06:17 AM

திருத்தணி: சேதமடைந்த ஊர்ப்புற நுாலகத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் ஊர்ப்புற நுாலகம், ஊராட்சி அலுவலக கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றன.
இந்த நுாலகத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சில ஆண்டுகளாக கட்டடம் பழுது காரணமாக நுாலகம் திறக்கப்படுவதில்லை. இதனால், வாசகர்கள் நுாலகத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, அபாய நிலையில் உள்ள நுாலக கட்டடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, வாசகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

