sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கழிவுகள் குவிப்பதை தடுக்க இரும்பு தடுப்பு அமைப்பு

/

 கழிவுகள் குவிப்பதை தடுக்க இரும்பு தடுப்பு அமைப்பு

 கழிவுகள் குவிப்பதை தடுக்க இரும்பு தடுப்பு அமைப்பு

 கழிவுகள் குவிப்பதை தடுக்க இரும்பு தடுப்பு அமைப்பு


ADDED : டிச 14, 2025 06:39 AM

Google News

ADDED : டிச 14, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே ஏரிக்கரை பகுதியில் கழிவுகள் குவிக்கப்படுவதை தடுக்க, வாகனங்கள் உள்ளே செல்ல முடியாதபடி சாலையோரம் இரும்பு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையோரம், கீழ்முதலம்பேடு ஏரிக்கரை அருகே, தினசரி டன் கணக்கில் கழிவுகள் குவித்து எரிக்கப்பட்டு வந்தன. மேலும் டேங்கர் லாரிகள் மூலம், அப்பகுதியில் கழிவுநீர் திறந்து விடப்பட்டது.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், அருகில் உள்ள கீழ்முதலம்பேடு ஏரி நீரும் மாசு அடைந்தது. சில மாதங்களுக்கு முன், கீழ்முதலம்பேடு ஊராட்சி நிர்வாகம், அந்த இடத்தை சுத்தம் செய்து, எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்தது.

'குப்பைகளை கொட்டினாலோ அல்லது கழிவுநீரை ஊற்றினாலோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையின் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எச்சரிக்கை பலகையை மதிக்காத சில தனியார், இரவு நேரத்தில் டிராக்டர்கள் வாயிலாக கழிவுகள் குவிப்பதும், டேங்கர் லாரிகள் கழிவுநீர் திறந்து விடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர். கழிவுகள் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், மீண்டும் அப்பகுதி பழையபடி கழிவுகள் சூழ்ந்து காணப்பட்டன.

அதற்கு தீர்வு காணும் வகையில், சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்க கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் முடிவு எடுத்தது. அதன்படி கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாதபடி ஏரிக்கரை பகுதிக்கும் சாலைக்கும் இடையே, 100 மீட்டர் தொலைவுக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us