sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்க அறிவுறுத்தல்

/

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்க அறிவுறுத்தல்

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்க அறிவுறுத்தல்

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்க அறிவுறுத்தல்


ADDED : ஆக 13, 2025 02:39 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: சதுர்த்தி விழாவில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது.

விநாயகர் சதுர்த்திவிழா, இம்மாதம், 27ம் தேதி நடைபெறுவதையொட்டி, நேற்று பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில், அதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

சப் - கலெக்டர் ரவிக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், காவல் உதவி கமிஷனர் சங்கர், சப் - கலெக்டர் நேரடி உதவியாளர் செல்வகுமார், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குணசேகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் விழா குழுவினர்களும் பங்கேற்றனர்.

அப்போது அதிகாரிகள், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தினர்.

சிலை நிறுவுதல், ஊர்வலங்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிப்பது, காவல், தீயணைப்பு, மீன்வாரியம் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறுவது உள்ளிட்டவைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளைப் பயன்படுத்துதல், சட்டவிரோதமாக மின்சாரம் திருடுவதைத் தவிர்ப்பது, பட்டாசுகளை வெடிக்கத் தடை, காவல் துறையால் குறிப்பிடப்பட்ட நீர்நிலைகளில் கரைத்தல், அதற்கான நேரத்தை பின்பற்றுதல் வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us