sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மந்தகதியில் நெடுஞ்சாலை இணைப்பு பால பணி

/

மந்தகதியில் நெடுஞ்சாலை இணைப்பு பால பணி

மந்தகதியில் நெடுஞ்சாலை இணைப்பு பால பணி

மந்தகதியில் நெடுஞ்சாலை இணைப்பு பால பணி


ADDED : டிச 27, 2024 01:50 AM

Google News

ADDED : டிச 27, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருப்பதி - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் பாலம் இணைப்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், திருவள்ளூரில் இருந்து, ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா வரை அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.

திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் வரை, மீதம் உள்ள பணி, 2022ல் 364 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கி நடைபெற்று வருகிறது.

ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் வரை, 17.5 கி.மீட்டர் துாரம் சாலை பணி நடந்து வருகிறது.

இச்சாலையில், ஏழு இடங்களில் மேம்பாலம் மற்றும் 17 இடங்களில் சிறு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை குறுக்கே, ஐ.சி.எம்.ஆர்., அருகில் ஏற்கனவே உள்ள திருப்பதி நெடுஞ்சாலையில் இருந்து, திருநின்றவூர் வரை செல்லும் சாலையில், மேம்பாலம் இணைப்பு பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இதனால், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us