/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீத்தஞ்சேரி காட்டில் திடீர் தீ வனத்துறை விசாரணை
/
சீத்தஞ்சேரி காட்டில் திடீர் தீ வனத்துறை விசாரணை
ADDED : மார் 11, 2024 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, சீத்தஞ்சேரி - வெங்கல் மாநில நெடுஞ்சாலையில் காப்பு காடுகள் உள்ளன.
நேற்று கல்பட்டு பகுதியில் திடீரென தீ, 'மளமள' வென பரவியது.
அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்து சீத்தஞ்சேரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினர் சம்பரவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள், 10 கி.மீட்டர் சுற்றளவிற்கு தீ பரவி மரங்கள் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து செங்குன்றம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

