/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
/
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
ADDED : ஏப் 04, 2025 02:40 AM

பொன்னேரி:பொன்னேரியில், ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வர் சுவாமி ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும், பங்குனி பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 7:30மணிக்கு சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழுங்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகங்கள், தீபஆராதனைகள் நடந்தன. காலை, 10:30 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.
* திருத்தணி காந்திநகர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த, 27 ம் தேதி துவங்கியது. எட்டாம் நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில், டிராக்டரில் எழுந்தருளினார். முருக்கம்பட்டு பக்தர்கள் உடலில் அலகு குத்தி சென்றனர்.
நள்ளிரவில் உற்சவர் அம்மன், திருத்தணி காந்தி நகருக்கு வந்தடைந்தார்.

