sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்

/

தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்


UPDATED : ஆக 18, 2025 01:20 AM

ADDED : ஆக 18, 2025 01:17 AM

Google News

UPDATED : ஆக 18, 2025 01:20 AM ADDED : ஆக 18, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:பேரம்பாக்கம் ஏரியிலிருந்து சவுடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

Image 1457588


கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியில், அரசு உத்தரவுப்படி, சில நாட்களாக சவுடு மண் அள்ளப்பட்டு, லாரிகள் வாயிலாக சென்னை உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இவ்வாறு ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், சாலையில் சவுடு மண் சிதறி கொண்டே செல்கிறது.

இதனால் பரவும் துாசியால், நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினரும் தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.



எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் கோரிக்கை வி டுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us