/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனைவியிடம் வரதட்சணை கணவனுக்கு வலை
/
மனைவியிடம் வரதட்சணை கணவனுக்கு வலை
ADDED : பிப் 19, 2024 06:33 AM
திருத்தணி: திருத்தணி அடுத்த வி.கே.ஆர்.புரம் மோசூர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமூர்த்தி மகள் சுமதி, 22. இவருக்கும் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வசிக்கும் சரவணகுமார், 27 என்பவருக்கும் கடந்தாண்டு பிப்.,1 ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, சுமதிக்கு, 15 சவரன் நகைகள், சரவணகுமாருக்கு, 5 சவரன் செயின் மற்றும் 80,000 ரூபாய் வரதட்சணையாக சுமதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணகுமார், அவரது சகோதரர் ராஜசேகர், தாய், கஸ்துாரி ஆகியோர் கூடுதலாக நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் கேட்டு சுமதியை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
சுமதி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்கு பதிந்து வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய சரவணகுமாரை தேடி வருகின்றனர்.

