sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழவேற்காடில் மணல் திட்டுக்களில் ஓய்வெடுக்கும் வர்ணநாரைகள்

/

பழவேற்காடில் மணல் திட்டுக்களில் ஓய்வெடுக்கும் வர்ணநாரைகள்

பழவேற்காடில் மணல் திட்டுக்களில் ஓய்வெடுக்கும் வர்ணநாரைகள்

பழவேற்காடில் மணல் திட்டுக்களில் ஓய்வெடுக்கும் வர்ணநாரைகள்


ADDED : டிச 14, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 14, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு:பழவேற்காடு சரணாலயப்பகுதியில், வர்ணநாரைகள் கூட்டம் கூட்டமாக அங்குள்ள மணல் திட்டுகளில் இரைதேடலுக்கு பின் ஓய்வெடுத்து வருகின்றன.

பழவேற்காடு சரணலாயத்தில், கூழைக்கடா, கடல்பொந்தா, பூநாரை, வர்ணநாரை, சாம்பல்நிற நாரை என, பல்வேறு வகையான பறவையினங்கள் உள்ளன.

ஆண்டுதோறும், டிசம்பர் மாத இறுதியில் துவங்கி, ஏப்ரல் மாதம் இனப்பெருக்கம் மற்றும் இரைதேடி இங்கு வருகின்றன.

தற்போது அதற்கான சீசன் துவங்கி உள்ளநிலையில், கூழைக்கடா, வர்ணநாரை உள்ளிட்ட சில பறவையினங்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இரைதேடி சுற்றித்திரிகின்றன.

இதில் அதிகளவில் வர்ணநாரைகள் உள்ளன. இரைதேடலுக்கு பின், அங்குள்ள மணல் திட்டுகளில் ஓய்வெடுத்து வருகின்றன.

இவை பழவேற்காடு பகுதிக்கு செல்லும் சுற்றுலாப்பயணியர் மற்றும் மீனவர்களை பரவசப்படுத்துகின்றன.

ஜனவரி மாத இறுதியில், பிளம்பிங்கோ, கடல்பறவை உள்ளிட்ட பல்பவேறு வகையான பறவைகள் அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us