sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிப்காட் வளாகம் அருகே இயங்கும் 3 மதுக்கடைகள் அகற்ற கோரிக்கை

/

சிப்காட் வளாகம் அருகே இயங்கும் 3 மதுக்கடைகள் அகற்ற கோரிக்கை

சிப்காட் வளாகம் அருகே இயங்கும் 3 மதுக்கடைகள் அகற்ற கோரிக்கை

சிப்காட் வளாகம் அருகே இயங்கும் 3 மதுக்கடைகள் அகற்ற கோரிக்கை


ADDED : மே 23, 2024 12:05 AM

Google News

ADDED : மே 23, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகள், 24 மணி நேரமும் இயங்குவதால், எப்போதும் தொழிலாளர்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதான சாலைகளில், தனியாருக்கு சொந்தமான இடங்களில், மூன்று அரசு மதுக்கடைகள் (எண்: 9105, 9191, 9138) இயங்கி வருகின்றன.

தொழிலாளர்கள் மட்டுமே வாடிக்கையாளர்கள் என்ற நிலையில் அந்த மூன்று கடைகளும் இயங்குவதால், எப்போதும் திருவிழா கூட்டம் போல் காட்சியளிக்கும்.

தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணத்தை அரசு மதுக்கடைகளில் இழப்பது ஒருபுறம் இருக்க பல தொழிலாளர்கள் குடித்துவிட்டு வேலைக்கு செல்லும் ஆபத்தான நிலை தொடர்கிறது. இதனால் உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் விபத்து போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, இந்த மூன்று மதுக் கடைகளையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக சிப்காட் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், இதுவரை கடைகள் அகற்றப்படவில்லை. இதனால் தொழில் முனைவோருக்கும், தொழிலாளிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு, தொழிற்சாலைகள் சந்திக்கும் சிக்கல்கள், தொழிலாளர்கள் பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக, தொழிற்சாலை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us