sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'இ - சேவை' மையம் அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை மனு

/

'இ - சேவை' மையம் அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை மனு

'இ - சேவை' மையம் அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை மனு

'இ - சேவை' மையம் அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை மனு


ADDED : ஜூலை 30, 2024 06:43 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் சென்றாயன்பாளையம் கிராமவாசிகள் சார்பில் சரவணன் என்பவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

பூண்டி ஒன்றியத்தில் உள்ள சென்றாயன்பாளையம், திருப்பேர், கிரீன்வேல்நத்தம், அரும்பாக்கம், நயப்பாக்கம், நம்பாக்கம், அரியத்துார் மற்றும் வெல்வாய் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி, சென்றாயன்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 1990ல், இந்த கிராமங்களில் சில பென்னலுார்பேட்டை மற்றும் மேட்டுப்பாளையம் வேளாண் கூட்டுறவு சங்கத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது, சென்றாயன்பாளையம் கூட்டுறவு சங்கத்தில், பயிர் கடன் தவிர வேறு சேவை எதுவும் வழங்கப்படவில்லை. 'இ - சேவை' வருவாய் துறை சான்று பெற, 7 கி.மீட்டர் பயணிக்க வேண்டி உள்ளது. நகைக்கடன், கால்நடை பராமரிப்பு, சுயஉதவிக் குழு கடன் பெற முடியாமல், இதர வணிக வங்கிகளுக்கு செல்ல, 20 கி.மீட்டர் துாரத்தில் உள்ள திருவள்ளூருக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே, சென்றாயன்பாளையம் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 'இ - சேவை' மையம் மற்றும் இதர கடன் வசதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us