/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்மாற்றி அருகில் குப்பை எரிப்பு
/
மின்மாற்றி அருகில் குப்பை எரிப்பு
ADDED : மே 27, 2024 04:04 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் , காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இக்குடியிருப்புவாசிகளுக்காக, வீட்டு வசதி வாரியம் மற்றும் ஆவடி பைபாஸ் ஆகிய இடங்களில், மின்வாரியம் மின்மாற்றி அமைத்து, மின்சாரம் வழங்கி வருகிறது.
இவ்விரண்டு மின்மாற்றிக்கு கீழ், பகுதிவாசிகள் குப்பை கொட்டி வருகின்றனர். குவிந்துள்ள குப்பையை, சிலர் தீ வைக்கின்றனர். இதனால், மின்விபத்து ஏற்பட்டு, மின்மாற்றி எரிந்து பெருத்த சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை, என, புட்லுார் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

