sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்களால் அரசு மருத்துவமனை முன் நெரிசல்

/

அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்களால் அரசு மருத்துவமனை முன் நெரிசல்

அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்களால் அரசு மருத்துவமனை முன் நெரிசல்

அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்களால் அரசு மருத்துவமனை முன் நெரிசல்


ADDED : ஆக 12, 2024 07:05 AM

Google News

ADDED : ஆக 12, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஜே.என்.சாலையில் அமைந்துள்ளது. இங்கு, புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு, இதய நோய் மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட, பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமும், 3,000த்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மகப்பேறு மற்றும் உள்நோயாளிகள் என, 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. உள் நோயாளிகள் சிகிச்சை பெறுவோறுக்கு உதவ, உதவியாளர்களும் உடன் தங்கி உள்ளனர்.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், விபத்து, மகப்பேறு உள்ளிட்ட சிகிச்சை பெறுவேறுக்காக, ஆம்புலன்ஸ் வாகனங்கள், தினமும் வந்து செல்கின்றன.

மருத்துவமனை வளாகம் முன், ஜே.என்.சாலையில், 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதனால், மருத்துவமனை எதிரில், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆம்புலன்ஸ் வாகனங்களும், சில சமயங்களில், நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.

இதனால், அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது.

எனவே, அரசு மருத்துவமனை எதிரில் உள்ள, ஜே.என்.சாலையில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகளின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us