sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

/

பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை


ADDED : மே 13, 2024 09:49 PM

Google News

ADDED : மே 13, 2024 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்கள் சேர, வரும் 24 கடைசி நாளாகும்.

செவ்வாப்பேட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பாஸ்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு அனைத்து பலவகைத் தொழில் நுட்ப கல்லுாரிகளில், முதல் மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பிற்கு https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு விண்ணப்பிக்க இயலாதோர், மாவட்ட சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி சேவை மையமாக செயல்படுகிறது.

முதல் ஆண்டு பட்டய சேர்க்கைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு பட்டய சேர்க்கைக்கு மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவுக் கட்டணம் 150 ரூபாய் இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.

நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை, கடந்த 6ம் தேதி துவங்கியது. வரும், 20க்குள் விண்ணப்பிக்கலாம். முதலாமாண்டு சேர்க்கைக்கு மே 24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து தகவல், வழிகாட்டி மற்றும் தொலைபேசி எண்கள் https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு 94449 42640 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us