sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 ஆயுள் சிறைவாசம் முடித்த கைதிகள் இருவர் கொலை

/

 ஆயுள் சிறைவாசம் முடித்த கைதிகள் இருவர் கொலை

 ஆயுள் சிறைவாசம் முடித்த கைதிகள் இருவர் கொலை

 ஆயுள் சிறைவாசம் முடித்த கைதிகள் இருவர் கொலை


ADDED : டிச 27, 2025 04:25 AM

Google News

ADDED : டிச 27, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: ஆயுள் சிறைவாசம் முடித்த கைதிகள் இருவரும் மோதிக்கொண்டதில், வெட்டி கொல்லப்பட்டனர்.

திருநெல்வேலி அருகே தச்சநல்லுார் கரையிருப்பை சேர்ந்தவர் மூக்கன், 52; தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் தங்க கணபதி, 50; தனியார் நிறுவனத்தில் காவலாளி. இருவரும் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து, சமீபத்தில் விடுதலையானவர்கள்.

டிச., 20 இரவு, அப்பகுதியில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி மையம் அருகே இருவரும் மது அருந்தினர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மூக்கன், அரிவாளால் தங்க கணபதியை சரமாரியாக வெட்டி தப்பினார்.

இதையடுத்து, தங்க கணபதியின் சகோதரர் முத்துகுமரன், 46, மூக்கனின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டினார். இதில், படுகாயமடைந்த மூக்கனும், வெட்டப்பட்ட தங்க கணபதியும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மூக்கன் சிகிச்சை பலனின்றி, டிச., 21ல் உயிரிழந்தார். தச்சநல்லுார் போலீசார், முத்துகுமரனை கைது செய்தனர். சிகிச்சையில் இருந்த தங்க கணபதியும், நேற்று உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us