sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 தீயணைப்பு அதிகாரியை லஞ்ச வழக்கில் சிக்க வைத்தவரின் முன்ஜாமின் தள்ளுபடி 'இது கேவலமான போக்கு' என ஐகோர்ட் நீதிபதி காட்டம்

/

 தீயணைப்பு அதிகாரியை லஞ்ச வழக்கில் சிக்க வைத்தவரின் முன்ஜாமின் தள்ளுபடி 'இது கேவலமான போக்கு' என ஐகோர்ட் நீதிபதி காட்டம்

 தீயணைப்பு அதிகாரியை லஞ்ச வழக்கில் சிக்க வைத்தவரின் முன்ஜாமின் தள்ளுபடி 'இது கேவலமான போக்கு' என ஐகோர்ட் நீதிபதி காட்டம்

 தீயணைப்பு அதிகாரியை லஞ்ச வழக்கில் சிக்க வைத்தவரின் முன்ஜாமின் தள்ளுபடி 'இது கேவலமான போக்கு' என ஐகோர்ட் நீதிபதி காட்டம்


ADDED : டிச 16, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: 'அரசு அதிகாரிகளை பதவி உயர்வு பெற விடாமல் தடுக்கும் நோக்கில் குற்றங்கள் புனைவது ஏற்புடையதல்ல; கேவலமாக உள்ளது' என, கருத்து தெரிவித்து, சதி திட்டம் தீட்டி, உயர் அதிகாரியை லஞ்ச வழக்கில் சிக்க வைத்தவரின் முன் ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தள்ளுபடி செய்தார்.

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் சரவணபாபுவை, லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க, அவரது அலுவலகத்தில், 2.50 லட்சம் ரூபாயை மறைத்து வைத்து, பின் லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் சிக்க வைக்க முயற்சித்த சம்பவம், 'சிசிடிவி' காட்சிகள் மூலம் அம்பலமானது.

இதுகுறித்து, துணை இயக்குநர் சரவணபாபு புகாரில், அவரது அலுவலகத்தில் பணம் வைத்த விஜய், அதற்கு உதவிய முத்துசுடலை, சதி திட்டம் தீட்டி, அதை செயல்படுத்திய தீயணைப்பு வீரர்கள் ஆனந்த், முருகேஷ், மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய நபராக தேடப்படும், திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். அவர், தனக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

சரவணபாபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், 'உயர் அதிகாரியை சிக்க வைக்கும் குற்ற நாடகத்தில் முக்கிய குற்றவாளியாக வீரராஜ் உள்ளார்.

அவர் தான் மற்ற தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோரை இணைத்து, ஒரு நெட்வொர்க்கை ஏற்படுத்தி உள்ளார். அவரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தால் தான், முழு பின்னணியும் தெரியவரும். இதில், வேறு யாருக்கெல்லாம் தொடர்பு என்பது தெரியும்' என்றார்.

வீரராஜ் தரப்பில் வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோஜ் குமார் ஆஜரானார்.

அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, 'அரசு அதிகாரிகளை பதவி உயர்வு பெற விடாமல் தடுக்கும் நோக்கில், சக அதிகாரிகள் குற்றங்கள் புனைவது ஏற்புடையதல்ல; கேவலமாக உள்ளது. இவர் தான் இந்த சதி திட்டத்தின் முக்கிய நபராக கருதப்படுவதால், அவரை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க வேண்டும்.

இதன் முழு பின்னணியும் தெரிய வேண்டும். முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். ஜனவரி 2ம் தேதி அவருக்கு ஜாமின் கேட்டு மனு செய்யுங்கள்' என, உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us