sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 மது போதை தகராறில் இரட்டை கொலை

/

 மது போதை தகராறில் இரட்டை கொலை

 மது போதை தகராறில் இரட்டை கொலை

 மது போதை தகராறில் இரட்டை கொலை


ADDED : டிச 27, 2025 04:32 AM

Google News

ADDED : டிச 27, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மது போதையில் ஏற்பட்ட தகராறு இரட்டை கொலையில் முடிந்தது.

திருநெல்வேலி அருகே தச்சநல்லூர் கரையிருப்பை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மூக்கன் 52. அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் தனியார் நிறுவன காவலாளி தங்க கணபதி 50. இருவரும் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலையாகி வெளியே வந்தனர்.

டிச., 20 இரவு அங்குள்ள பழுதடைந்த அங்கன்வாடி மையம் அருகே அவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மூக்கன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்ககணபதியை சரமாரியாக வெட்டினார். இந்த தகவல் அறிந்து தங்ககணபதியின் சகோதரர் முத்துகுமரன் 46, மூக்கனின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

படுகாயமடைந்த மூக்கன், தங்க கணபதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூக்கன் சிகிச்சை பலனின்றி டிச., 21 இறந்தார். முத்துக்குமரனை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தங்க கணபதியும் நேற்று இறந்தார். நண்பர்களுக்குள் ஏற்பட்ட போதை தகராறு இரட்டை கொலையில் முடிந்தது.






      Dinamalar
      Follow us