sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூலை 25, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2131 கன அடியில் இருந்து 4001 கன அடியாக அதிகரித்தது.

அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 130.90 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1867 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

ரூல்கர்வ் விதிமுறைப் படி ஜூலை 31 வரை அணையில் 137 அடி வரை தேக்கலாம். தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின்நிலையத்தில் நான்கு ஜெனரேட்டர்களில் முழு அளவில் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us