sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாணவியை இறக்கி விட மறுத்த அரசு பஸ்சை மறித்த கிராம மக்கள்

/

மாணவியை இறக்கி விட மறுத்த அரசு பஸ்சை மறித்த கிராம மக்கள்

மாணவியை இறக்கி விட மறுத்த அரசு பஸ்சை மறித்த கிராம மக்கள்

மாணவியை இறக்கி விட மறுத்த அரசு பஸ்சை மறித்த கிராம மக்கள்


ADDED : டிச 25, 2024 07:29 AM

Google News

ADDED : டிச 25, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கோவையில் இருந்து க.புதுப்பட்டிக்கு அரசு பஸ்சில் வந்த மாணவியை, இறக்கி விடாமல் சென்ற அரசு பஸ்சை க.புதுப்பட்டி கிராம மக்கள் மறித்தனர்.

க.புதுப்பட்டியை சேர்ந்த ஆசிரியர் மகள் கோவை கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கோவையில் இருந்து கம்பம் செல்லும் அரசு பஸ்சில் ஏறியுள்ளார்.

டிக்கட் எடுக்கும் போதே கண்டக்டர், க.புதுப்பட்டியில் பஸ் நிற்காது. உத்தமபாளையம் அல்லது கம்பத்தில் இறங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

சரி என்று கூறி பஸ்சில் பயணம் செய்துள்ளார். தேனி வந்த போது, தனது தந்தைக்கு அலைபேசியில் விபரத்தை மாணவி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைத்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவி வந்த பஸ்சை மறித்தனர். இதனால் தேனி - - குமுளி ரோட்டில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின்பேரில் உத்தமபாளையம் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து,பஸ்சை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us