/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெடி வெடிக்காமல் இருக்க எச்சரித்த போலீசாரை தாக்கிய இருவர் கைது
/
வெடி வெடிக்காமல் இருக்க எச்சரித்த போலீசாரை தாக்கிய இருவர் கைது
வெடி வெடிக்காமல் இருக்க எச்சரித்த போலீசாரை தாக்கிய இருவர் கைது
வெடி வெடிக்காமல் இருக்க எச்சரித்த போலீசாரை தாக்கிய இருவர் கைது
ADDED : செப் 10, 2024 09:55 AM

தேனி: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வெடி வெடிக்க வேண்டாம் என எச்சரித்த போலீசாரை தாக்கி, பணி செய்யவிடாமல் தடுத்து கற்களால் தாக்கிய இருவரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.
தேனி பொம்மையக் கவுண்டன்பட்டியில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. அப்போது தனியார் மருத்துவமனை அருகே உள்ள டீ கடை முன் இருவரும் வெடி வெடித்தனர். அதனை பார்த்த அருகில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊர்க்காவல்படை பெண் காவலர் முத்துலட்சுமி, ஏட்டு வெற்றிவேல், முதல் நிலை பெண் போலீஸ்காரர் காமாட்சி ஆகியோர் வெடி வெடிக்கக்கூடாது என எச்சரித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கபிலன், ஜீவா ஆகிய இருவரும் போலீசாரை தரக்குறைவாக பேசி, கற்களைக் கொண்டு எறிந்து அரசு பணி செய்யவிடாமல் தடுத்தனர். பின் கொலை மிரட்டல் விடுத்தனர். இருவரை போலீசார் கைது செய்தார்.

