ADDED : செப் 05, 2025 02:45 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் நகராட்சி கமிஷனராக இருந்த காஞ்சனா 2024 ஜூலையில் மாறுதலாகி சென்றார். அதன்பின் கம்பம், சின்னமனுார் கமிஷனர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தனர்.
ஆனால் இவர்கள் முழுமையாக கவனிக்க முடியாததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டது. நிரந்தர கமிஷனர் நியமிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஓராண்டிற்குப் பின் நகராட்சி நிர்வாக மதுரை மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பு அலுவலராக இருந்த முத்துலட்சுமி கூடலுார் நகராட்சி கமிஷனராக நேற்று பொறுப்பேற்றார்.
