/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சபரிமலையில் புதிய நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
/
சபரிமலையில் புதிய நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சபரிமலையில் புதிய நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சபரிமலையில் புதிய நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 14, 2025 06:22 AM

சபரிமலை: சபரிமலையில் மாளிகைபுறத்தம்மன் கோயில் அருகே நவக்கிரக கோயில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சபரிமலையில் ஐயப்பசுவாமி தரிசனம் முடித்து விட்டு பக்தர்கள் மாளிகை புறத்தம்மன் கோயிலில் தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலின் இடது புறம் மேற்பகுதியில் நவக்கிரக மண்டபம் அமைந்திருந்தது. இங்கும் பக்தர்கள் வழிபாடு செய்வர்.
இந்த நவக்கிரக மண்டபத்தை அப்புறப்படுத்தி விட்டு வசதியான மற்றொரு இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதையடுத்து மாளிகை புறத்தம்மன் கோயிலின் இடது புறம் இக்கோயில் கட்டப்பட்டது.
இக்கோயிலுக்கான கும்பாபிஷேகம் மற்றும் நவக்கிரக விக்கிரகங்களுக்கான புனர்பிரதிஷ்டை சடங்குகள் ஜூலை 11-ல் துவங்கியது. அன்று சுத்தி கிரியைகள் நடந்தன. ஜூலை 12 கும்பாபிஷேகத்திற்கு முன்னோடி பூஜைகள் துவங்கின. அன்று மாலை ஏற்கனவே நவக்கிரக மண்டபத்தில் இருந்த நவக்கிரக சிலைகள் முறையான பூஜைகளுக்கு பின் எடுக்கப்பட்டு ஹோம மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தந்திரி கண்டரரும் ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
நேற்று காலை 10:50 மணிக்கு கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. நவக்கிரக சிலைகளை பூஜாரிகள் சுமந்து மாளிகைபுறத்தம்மன் கோயிலை வலம் வந்த பின் நவக்கிரக கோயிலுக்குள் கொண்டு வைக்கப்பட்டது. அங்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்களை பூஜாரிகள் எடுத்து கோபுரத்தின் மேற்பகுதிக்கு கொண்டு செல்ல அந்த புனித நீரை தந்திரி கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி தீபாராதனை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நவக்கிரக பிரதிஷ்டை பூஜை முடிந்து நேற்றிரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 16 மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

