sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 தனித்தேர்வர்கள் ஜன.,7 வரை விண்ணப்பிக்கலாம் 7 மையங்களில் ஏற்பாடு

/

 தனித்தேர்வர்கள் ஜன.,7 வரை விண்ணப்பிக்கலாம் 7 மையங்களில் ஏற்பாடு

 தனித்தேர்வர்கள் ஜன.,7 வரை விண்ணப்பிக்கலாம் 7 மையங்களில் ஏற்பாடு

 தனித்தேர்வர்கள் ஜன.,7 வரை விண்ணப்பிக்கலாம் 7 மையங்களில் ஏற்பாடு


ADDED : டிச 25, 2025 05:50 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் 7 மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2026 மார்ச் ஏப்.,ல் 10ம் வகுப்பு, மேல்நிலை வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடக்கிறது.

இதில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் தனித்தேர்வர்களாக எழுதுபவர்கள் 2026 ஜன., 7 வரை விண்ணப்பிக்கலாம். ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் பள்ளிகளில் செயல்படும் சேவை மையங்களில் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில் கம்பம் ஆ.ரா., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போடி ஜா.கா.நி., மேல்நிலைப்பள்ளி ஆகியவை சேவைமையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பம் செய்வோர் ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 எடுத்து வர வேண்டும். பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி தனியாக வழங்கப்பட உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்தல், மேலும் விவரங்களுக்கு சேவை மையங்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேர்வுகள் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us