sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகனை கொலை செய்தவரை கொன்ற தந்தை, உறவினர் கைது உறவினர் ஒருவர் கைது

/

மகனை கொலை செய்தவரை கொன்ற தந்தை, உறவினர் கைது உறவினர் ஒருவர் கைது

மகனை கொலை செய்தவரை கொன்ற தந்தை, உறவினர் கைது உறவினர் ஒருவர் கைது

மகனை கொலை செய்தவரை கொன்ற தந்தை, உறவினர் கைது உறவினர் ஒருவர் கைது


ADDED : அக் 29, 2024 05:45 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே பழிக்கு பழியாக மகனை கொலை செய்த இளைஞரை வெட்டிக் கொன்ற தந்தை உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கண்டமனூரை சேர்ந்த அழகர்சாமி மகன் சஞ்சீவ்குமார் 20, பத்தாம் வகுப்பு படித்துவிட்டு தேனியில் ஒர்க் ஷாப்பில் வேலை செய்தார்.

கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலையில் அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே வெட்டுப்பட்டு பிணமாக கிடந்தார்.

சஞ்சீவ் குமாரின் தாயார் நதியா புகாரில் கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரிந்தது. சஞ்சீவ்குமார் பத்தாம் வகுப்பு படித்த போது தன்னுடன் படித்த மாணவரை கொலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சஞ்சீவ் குமாருடன் மேலும் சிலர் கைது செய்து, ஜாமீனில் வெளியே வந்திருந்தனர். கொலை செய்யப்பட்ட மாணவரின் தந்தை பாலமுருகன் சஞ்சீவ்குமாரை பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டமிட்டார்.

மகன் இறப்புக்கு சஞ்சீவ்குமார் தான் காரணம் என்றும் இவரை கொலை செய்ய வேண்டும் என்றும் உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.

கடந்த 20ம் தேதி சஞ்சீவ் குமார் மோட்டார் சைக்கிளில் தனியாக வந்ததை உறுதி செய்த பாலமுருகன், தனது உறவினரான முனியாண்டி மகன் அஜித் 25, என்பவரையும் உடன் வைத்துக்கொண்டார். இரவு 11:00 மணி அளவில் சஞ்சீவ்குமார் தனியாக இருப்பதை அறிந்த அவர்கள் சஞ்சீவ் குமாரை அரிவாள்,கத்தியால் வெட்டி கொலை செய்து யாருக்கும் தெரியாமல் உடலை சாக்கால் மூடிவிட்டு சென்று விட்டனர்.

போலீசார் தேடுவதை அறிந்த இருவரும் வனப்பகுதிக்குள் பதுங்கி அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வந்தனர்.

நேற்று முன் தினம் இரவு அம்மச்சியாபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். கொலையில் வேறு யாரேனும் சம்பந்தம் பெற்றுள்ளனரா என்றும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us