sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நிலுவை வரி பாக்கி செலுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிப்பு

/

நிலுவை வரி பாக்கி செலுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிப்பு

நிலுவை வரி பாக்கி செலுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிப்பு

நிலுவை வரி பாக்கி செலுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிப்பு


ADDED : மார் 16, 2024 06:27 AM

Google News

ADDED : மார் 16, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கம்பம் நகராட்சிகளில் குடிநீர் நிலுவை வரி செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை நகராட்சி மேற்கொண்டது.

கம்பம் நகராட்சியில் 12 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வரியாக மூன்று மாதங்களுக்கு ரூ.273 ம், வர்த்தக இணைப்புகளுக்கு ரூ. 2000 ம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆண்டிற்கு 4 முறை குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும். நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் மூலம் ஆண்டிற்கு ஒரு கோடியே 40 லட்சம் வருவாய் வருகிறது. தற்போது குடிநீர் வரி ரூ.33 லட்சம் வரை நிலுவை வரி பாக்கி உள்ளது.

சொத்து வரியை வசூல் செய்பவர்கள் - குடிநீர் கட்டணத்தை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கம்பம் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் குடிநீர் கட்டணம் வசூல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. இது குறித்து மண்டல இயக்குநர் நகராட்சி கமிஷனர்களை எச்சரித்துள்ளார். அதன்பேரில் நேற்று கம்பம், தேனி நகராட்சிகளில் குடிநீர் கட்டணம் நிலுவை பாக்கி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியை நகராட்சி பணியாளர்கள் துவக்கினர். பெரும்பாலான வீடுகளில் நிலுவை தொகையை செலுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us