/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 14, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தேனி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், 'தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி பொட்டலம் முறையை அமல்படுத்த வேண்டும். ரேஷன் கடைகள் நிர்வாகத்திற்கு தனித்துறை ஏற்படுத்துதல்' உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொருளாளர் பொன்.அமைதி தலைமை வகித்தார். மாவட்ட சிறப்பு தலைவர்கள் பன்னீர்செல்வம், அழகர்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மகாலிங்கம் பேசினார். மாநில செயலாளர் பாண்டி நன்றி தெரிவித்தார். ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.

