/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்க கோரிக்கை
/
விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்க கோரிக்கை
ADDED : ஏப் 17, 2024 05:22 AM
தேனி: தேர்தல் பணியில் பங்கேற்ற வசதியாக இன்று(ஏப்.,17) நடைபெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும்பணியை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் கூறுகையில், மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
இதில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி இரவு வரை நீடிக்கிறது.
இப்பணியை முடிந்து ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நாளை(ஏப்.,18) காலை தேர்தல் பணி பயிற்சிக்கு செல்ல வேண்டி உள்ளது. அதைத்தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு மேல் ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும்.
எனவே தேர்வுத்துறை அதிகாரிகள் இன்று விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்.,22க்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

