sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மதுரை - - போடி அகல ரயில் பாதையில் பாலம், டிராக் குறித்து அதிகாரிகள் ஆய்வு

/

மதுரை - - போடி அகல ரயில் பாதையில் பாலம், டிராக் குறித்து அதிகாரிகள் ஆய்வு

மதுரை - - போடி அகல ரயில் பாதையில் பாலம், டிராக் குறித்து அதிகாரிகள் ஆய்வு

மதுரை - - போடி அகல ரயில் பாதையில் பாலம், டிராக் குறித்து அதிகாரிகள் ஆய்வு


ADDED : செப் 01, 2024 06:33 AM

Google News

ADDED : செப் 01, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : மதுரை --- போடி அகல ரயில் பாதை வழித் தடத்தில் மின் மயமாக்கல் பணி நிறைவு பெற்ற நிலையில் தெற்கு ரயில்வே துணை பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை -- போடி இடையே 2023 அக்.12 ல் 110 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. அதன் பின் இத் தடம் 25 ஆயிரம் வோல்ட் மின் பாதையாக மாற்றி மார்ச் 23 ல் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடந்தது. மின் வழித்தடத்தில் மூன்று மாதங்களாக சோதனை நடந்தன.

பணிகள் முடிந்து ஜூன் 16 ல் மதுரையில் இருந்து 121 கி.மீ., வேகத்தில் 3 பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் 7 நிமிடங்களில் போடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது.

இந்த ஆய்வு ரயிலில் கணினி, ஜி.பி.எஸ்., கருவியுடன் கூடிய அகல ரயில் பாதையில் அதிர்வுகளை கண்டறியும் வகையில் 'ஆசிலேசன் மானிட்டரிங் சிஸ்டம்' (Oscillation Monitoring System) என்ற தொழில் நுட்பத்துடன் மதுரை - போடி வழித்தடத்தில் 121 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் அதிர்வுகள் நிமிடத்திற்கு நிமிடம் ஆய்வு செய்து விபரங்கள் சேகரிக்கப்பட்டன. 10 நாட்களுக்கு முன்பு மதுரை - போடி அகல ரயில் பாதையில் 120 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.

நேற்று தெற்கு ரயில்வே துணை பொது மேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா மதுரை - போடி இடையே அமைக்கப்பட்டு உள்ள ரயில்வே பாலங்கள், சப்வே, டிராக், பிளாட்பாரம், போடி புதுக்காலனி சப்வே - யின் இருபுறமும் ரோடு அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். உடன் முதுநிலை மேலாளர் பிரசன்ன குமார் (போக்குவரத்து) தொலை தொடர்புதுறை உதவி மேலாளர் அசோக்குமார், கோட்ட மின்னணு பொறியாளர் ரோகன், கட்டுமானத்துறை பொறியாளர்கள் வெள்ளைத்துரை, முத்தையா உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்






      Dinamalar
      Follow us