sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொட்டகுடி ஆறு ஆக்கிரமிப்பால் கண்மாய்களுக்கு மழை நீர் செல்ல சிரமம்

/

கொட்டகுடி ஆறு ஆக்கிரமிப்பால் கண்மாய்களுக்கு மழை நீர் செல்ல சிரமம்

கொட்டகுடி ஆறு ஆக்கிரமிப்பால் கண்மாய்களுக்கு மழை நீர் செல்ல சிரமம்

கொட்டகுடி ஆறு ஆக்கிரமிப்பால் கண்மாய்களுக்கு மழை நீர் செல்ல சிரமம்


ADDED : மே 23, 2024 03:46 AM

Google News

ADDED : மே 23, 2024 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி கொட்டகுடி ஆற்றின் இரு பகுதியையும் தனி நபர்களின் ஆக்கிரமிப்பால் பாதை குறுகலாக மாறி கண்மாய்களில் மழை நீரை முழுவதும் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

கேரளா மற்றும் குரங்கணி மலைப் பகுதியில் பெய்யும் மழை நீரானது குரங்கணி, கொட்டகுடி ஆற்றில் இருந்து தேனி கொட்டகுடி ஆறு வரை செல்கிறது.

குரங்கணி, கொட்டகுடி முந்தல் ரோட்டில் உள்ள ஆற்று பகுதியில் இருந்து போடி இரட்டை வாய்க்கால், அணைப்பிள்ளையார் அணை, வேட்டவராய கருப்பசாமி கோயில், கோடங்கிபட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கொட்டகுடி ஆற்று பகுதியின் இருபுறத்தையும் தனிநபர்கள் ஆக்கிரமித்து தென்னை, இலவம் மரங்கள் நட்டு விளை நிலங்களாக மாற்றி உள்ளனர். ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் பாதை குறுகலாக மாறி உள்ளது.

இதனால் மழைநீர் சீராக செல்ல முடியவில்லை. மேலும் மழை நீர் வரும் பாதையில் மணல் மேடுகள் அமைத்து கண்மாய்களுக்கு செல்லும் நீரை மாற்று பாதையில் திருப்பி விட்டு பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஆற்று நீர் கண்மாய்களுக்கு எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் மேலச்சொக்கநாதபுரம் சங்கரப்பன் கண்மாய், போடி பங்காருசாமி நாயக்கர் கண்மாய், மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய்களில் மழை நீரை முழுவதும் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

விவசாயிகள் பயன் பெறும் வகையில் குரங்கணியில் இருந்து கொட்டகுடி ஆறு முடியும் பகுதி வரை ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us