sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பிரசாரத்திற்கு கொக்கி போட்டு மின் திருட்டு தடுக்க கண்காணிப்பு குழு நியமனம்

/

பிரசாரத்திற்கு கொக்கி போட்டு மின் திருட்டு தடுக்க கண்காணிப்பு குழு நியமனம்

பிரசாரத்திற்கு கொக்கி போட்டு மின் திருட்டு தடுக்க கண்காணிப்பு குழு நியமனம்

பிரசாரத்திற்கு கொக்கி போட்டு மின் திருட்டு தடுக்க கண்காணிப்பு குழு நியமனம்


ADDED : ஏப் 06, 2024 05:13 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : தேர்தல் பிரசாரத்திற்கு மின் கம்பத்தில் இருந்து 'கொக்கி' போட்டு மின்சாரம் திருடினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, வேட்பாளரின் செலவு கணக்கில் அபராத தொகை சேர்க்கவும் தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.

தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு ஒலிபெருக்கி, மின் விளக்குகள் வைக்க தேவையான மின்சாரத்தை மின்கம்பத்தில் இருந்து நேரடியாக கொக்கி போட்டு திருடும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்று மின்சாரம் திருடுவது சட்டப்படி குற்றமாகும்.

இதை அந்த கட்சியினர் தங்களது ஆதரவாளர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஓட்டு சாவடிகளில் மின் இணைப்பு முக்கியம் என்பதால் மின்சாரம் உள்ளதா என்பதை சரி பார்த்து வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்தல் பிரசார இடங்களில் மின் இணைப்புகளை கண்காணிக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us