/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயன்பாடின்றி சேதம் அடைந்த சமுதாய கூடம்
/
பயன்பாடின்றி சேதம் அடைந்த சமுதாய கூடம்
ADDED : மே 23, 2024 03:42 AM

போடி: தேவாரம் அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் சமுதாயகூடம் உரிய பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளது.
சின்னமனூர் ஒன்றியம், பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராமகிருஷ்ணாபுரம். 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உளளன.
ராமகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் எம்.பி., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. பல லட்சம் மதிப்பில் குடிநீர், சுகாதார வளாகம் அடிப்படை வசதிகளுன் கூடிய சமுதாயகூடம் கட்டப்பட்டது.
பல ஆண்டுகள் ஆன நிலையில் உரிய பராமரிப்பு இல்லாததால் சமுதாய கூட கட்டடம் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்து உள்ளது. மின் விசிறி, தளவாடப் பொருட்கள் உடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. பகலில் மது அருந்தும் பாராகவும், இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறி உள்ளது.
சமுதாய கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
ரூ.பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சின்னமனூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

