/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டுப் பன்றிகளை வேட்டையாட பதுக்கிய 29 வெடிகுண்டுகள் பறிமுதல் குண்டு வெடித்து நாய் பலி
/
காட்டுப் பன்றிகளை வேட்டையாட பதுக்கிய 29 வெடிகுண்டுகள் பறிமுதல் குண்டு வெடித்து நாய் பலி
காட்டுப் பன்றிகளை வேட்டையாட பதுக்கிய 29 வெடிகுண்டுகள் பறிமுதல் குண்டு வெடித்து நாய் பலி
காட்டுப் பன்றிகளை வேட்டையாட பதுக்கிய 29 வெடிகுண்டுகள் பறிமுதல் குண்டு வெடித்து நாய் பலி
ADDED : ஆக 27, 2024 04:10 AM

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாட தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு வெடிகுண்டு வெடித்ததில் நாய் தலை சிதறி பலியானது. 29 வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரியகுளம் நடுப்புரவு காடுவெட்டி பகுதியில் கருப்பையா என்பவரின் புளியந்தோப்பு பகுதியில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நாட்டுவெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. வெடிகுண்டை கடித்து நாய் தலை சிதறி பலியாகி கிடந்தது. தோட்டங்களில் வைத்திருந்த தேவதானப்பட்டி அருகே ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் 30 பிடிபட்டார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ஆனந்தராஜ் 30, தப்பினார்.
இன்ஸ்பெக்டர் ஜெயராணி, எஸ்.ஐ., பிரேம் ஆனந்த், தேனி வெடிகுண்டு தடுப்பு பிரிவு எஸ்.ஐ., நேரு ஆகியோர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காட்டுப்பன்றிகள் மற்றும் வன விலங்குகளை வேட்டையாட தோட்டங்களில் பதுக்கி வைத்திருந்த 29 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.
தலா 200 கிராம் கொண்ட இவை கோழிதோல் மற்றும் கொழுப்பில் கருமருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதை காட்டுப்பன்றி கடித்த நொடியில் தலை சிதறி பலியாகும். மனிதர்கள் மிதித்தால் வெடித்து உடல் சிதறிவிடும். வெடிகுண்டு எங்கு தயாரிக்கப்படுகிறது என போலீசார் விசாரிக்கின்றனர்.
பறிமுதல் செய்த 29 நாட்டு வெடிகுண்டுகள் பாதுகாப்பா மதுரை வெடிபொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பப்பட உள்ளன.

