sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரேஷன் கார்டுக்கு துவரம்பருப்பு, பாமாயில் எப்போது! மே ஒதுக்கீடு வருவதில் தொடரும் தாமதம்

/

ரேஷன் கார்டுக்கு துவரம்பருப்பு, பாமாயில் எப்போது! மே ஒதுக்கீடு வருவதில் தொடரும் தாமதம்

ரேஷன் கார்டுக்கு துவரம்பருப்பு, பாமாயில் எப்போது! மே ஒதுக்கீடு வருவதில் தொடரும் தாமதம்

ரேஷன் கார்டுக்கு துவரம்பருப்பு, பாமாயில் எப்போது! மே ஒதுக்கீடு வருவதில் தொடரும் தாமதம்


ADDED : மே 14, 2024 12:07 AM

Google News

ADDED : மே 14, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : ரேஷன் கடைகளுக்கு இந்த மாதத்திற்கானதுவரம்பருப்பு, பாமாயில் ஒதுக்கீடின்றி கார்டுதாரர்கள்எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்து கிடக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 829 ரேஷன் கடைகள் மூலம், மாதந்தோறும் 3.66 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, மானிய விலையில் துவரம்பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர்.

ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ரேஷனில் வழங்கும் துவரம்பருப்பு, பாமாயிலை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மே மாத ஒதுக்கீடு இல்லை


ஒவ்வொரு மாதமும் சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள 3.66 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க 3.76 லட்சம் பாக்கெட் (ஒரு கிலோ) பாமாயில், 384 டன் துவரம்பருப்பு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்காக அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை துவரம்பருப்பு, பாமாயில் வழங்குவதற்கான டெண்டர் விடும். ஏப்ரலில் நடத்த வேண்டிய டெண்டர் தேர்தல் நடத்தை விதிமுறையால் நடத்தவில்லை.

மேலும், ஒப்பந்ததாரர்கள் துவரம்பருப்பிற்கு கூடுதல் விலை வைத்ததால், அரசு அதை செலுத்த முடியாத நிலையில் வைத்திருந்தது. ஒரு வழியாக ஒப்பந்தம் விடப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கான துவரம்பருப்பு, பாமாயில் ஒதுக்கீட்டிற்கான உத்தரவை நுகர்பொருள் வாணிப கழகம் வெளியிட்டுள்ளது.

274 டன் துவரம்பருப்புஒதுக்கீடு


சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறியதாவது:

சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளுக்கு வழங்க, மே மாதத்திற்கான ஒதுக்கீடாக பாமாயில் 3.75 லட்சம் (1 கிலோ) பாக்கெட், 274 டன் துவரம்பருப்பு ஒதுக்கீடு செய்துஉள்ளதாக, அறிவிப்பு வந்துஉள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் ரேஷன் கடைகளுக்கு இவை வினியோகம் செய்யப்படும்.






      Dinamalar
      Follow us