/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்
/
திருப்புத்துார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 03, 2024 04:38 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் கோட்டைகருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை பிப்.18ல் துவங்குகிறது.
திருப்புத்துார் கோட்டைக்கருப்பர் கோயிலில் திருப்பணிகள் நடந்து தற்போது பிப்.21 ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு தற்போது யாகசாலைக்கு முகூர்த்தக்கால் ஊன்றி யாகசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பிப்.18ல் அதிகாலையில் பூர்வாங்க பூஜைகள் துவங்கி, காலை 9:00 மணிக்கு வாஸ்துசாந்தி நடைபெறும். மாலை 4:00 மணிக்கு கலசங்கள் யாகசாலையில் பிரதிஷ்டை செய்யப்படும். இரவு 7:00 மணிக்கு முதற்காலயாகசாலை பூஜை துவங்கும்.
மறுநாள் காலை 7:00 மணிக்கு 2ம் காலயாக பூஜை, மாலை 4:00 மணிக்கு 3ம் கால யாகபூஜை நடைபெறும். பிப்.20ல் காலை 8:00 மணிக்கு 4ம் காலயாகபூஜை, மாலை 5:30 மணிக்கு 5ம் கால யாகபூஜையும் நடைபெறும்.
பிப்.21 காலை 6:00 மணிக்கு 6ம் காலயாக பூஜை துவங்கி பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெறும். பின்னர் கலசங்கள் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு மேல் காலை 10:00 மணிக்குள் விமான,மூலமூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடைபெறும்.
ஏற்பாட்டினை அறங்காவலர் எஸ்.வயிரவன் தலைமையில் திருப்பணிக்குழுவினர் செய்கின்றனர்.

