sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிவகங்கை குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறை

/

 சிவகங்கை குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறை

 சிவகங்கை குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறை

 சிவகங்கை குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறை


ADDED : டிச 16, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை இருப்பதால் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை நகரில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. குற்றப்பிரிவு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 எஸ்.ஐ., 6 சிறப்பு எஸ்.ஐ.,கள் உட்பட 17 போலீசார் பணி புரிகின்றனர்.

இதில் இன்ஸ்பெக்டர் அயல் பணியில் மதுரை உயர் நீதிமன்றத்தில் பணியில் நீண்ட நாட்களாக உள்ளார்.

எஸ்.ஐ.,க்கள் இரண்டு பேரும் கிரைம் டீமில் உள்ளனர். சிறப்பு எஸ்.ஐ., 7 போலீசார் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.

மற்றவர்கள் டி.எஸ்.பி., அலுவலகம், மருத்துவக் கல்லுாரி, எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணியில் உள்ளனர்.

ஸ்டேஷனில் உள்ள 7 பேர் தான் இரவு ரோந்து உள்ளிட்ட ஸ்டேஷனுக்கு வரும் புகார்களை விசாரிக்க வேண்டும்.

நகர் பகுதியில் டூவீலர் திருட்டும், பஸ் ஸ்டாண்டில் அலைபேசி திருட்டு உட்பட பல திருட்டுக்கள் நடக்கிறது.

எஸ்.பி., மாவட்ட தலைநகரில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசார் நியமனம் செய்து திருட்டுக்களை கட்டுபடுத்துவதோடு தொடர்புடையவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us