sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை சுப்பிரமணியர் கோயிலில் மார்ச் 15ல் பங்குனி விழா கொடியேற்றம்; மார்ச் 23 மாலை தேரோட்டம்

/

சிவகங்கை சுப்பிரமணியர் கோயிலில் மார்ச் 15ல் பங்குனி விழா கொடியேற்றம்; மார்ச் 23 மாலை தேரோட்டம்

சிவகங்கை சுப்பிரமணியர் கோயிலில் மார்ச் 15ல் பங்குனி விழா கொடியேற்றம்; மார்ச் 23 மாலை தேரோட்டம்

சிவகங்கை சுப்பிரமணியர் கோயிலில் மார்ச் 15ல் பங்குனி விழா கொடியேற்றம்; மார்ச் 23 மாலை தேரோட்டம்


ADDED : மார் 12, 2024 06:03 AM

Google News

ADDED : மார் 12, 2024 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,: சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 15 ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கும் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் மார்ச் 14 அன்று மாலை 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது. மார்ச் 15 அன்று காலை 8:00 மணிக்கு சுவாமி சன்னதி முன் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா துவங்குகிறது. அன்று இரவு 8:30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 8:00 மணிக்கு சுவாமி மண்டகப்படியில் எழுந்தருளல், இரவு 8:30 மணிக்கு ரிஷபம், மயில், அன்னம், யானை,ரிஷபம்,ஆட்டுகிடாய்,குதிரை ஆகிய வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடைபெறும்.

விழாவின் 9ம் நாளான மார்ச் 23ல் காலை 9:00 மணிக்கு ரதரோகணம், மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

அன்று இரவு 8:30 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள்வார். மார்ச் 24 அன்று இரவு 10 :00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு 11:00 மணிக்கு கொடி இறக்கத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. மார்ச் 25 ம் தேதி காலை சைத்தியோபசாரம், இரவு 6:30 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெறும். தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில், மேலாளர் இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் வேல்முருகன், கவுரவ கண்காணிப்பாளர் ராமசாமி, ஆலய ஸ்தானிகம் சந்திரசேகர குருக்கள், மண்டகப்படிதாரர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us