/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாகம்மாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
/
நாகம்மாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : பிப் 20, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, - மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோவிலில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.
கும்பாபிஷேக விழாவிற்காக நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின.
இதனை தொடர்ந்து இன்று காலை 7:00 மணி முதல் 2ம் கால யாகசாலை பூஜைகள், மாலை 5:30 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை தொடர்ந்து நடைபெற்று, நாளை காலை 4ம் கால யாகசாலை பூஜைக்கு பின் காலை 10:35 மணி முதல் 11:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

