நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை பறக்கும் படை தாசில்தார் மகாதேவன் தலைமையிலான குழுவினர் இடையமேலுார் பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.
வாகனத்தில் 7 டன் தேங்காய் இருந்துள்ளது. டிரைவர் ராஜேஷ் 25, உரிமையாளர் சுப்புராஜிடம் விசாரித்ததில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியிலிருந்து நத்தம் செல்வதாக கூறினர்.
உரிய ஆவணத்தை காட்டி வண்டியை எடுத்துச்செல்லுமாறு டிரைவரிடம் அறுவுறுத்தி தேங்காயை பறிமுதல் செய்து சிவகங்கை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

