sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாயமங்கலம் கோயிலில் நாளை பங்குனி பொங்கல்; பக்தர்கள் வருகை அதிகரிப்பு

/

தாயமங்கலம் கோயிலில் நாளை பங்குனி பொங்கல்; பக்தர்கள் வருகை அதிகரிப்பு

தாயமங்கலம் கோயிலில் நாளை பங்குனி பொங்கல்; பக்தர்கள் வருகை அதிகரிப்பு

தாயமங்கலம் கோயிலில் நாளை பங்குனி பொங்கல்; பக்தர்கள் வருகை அதிகரிப்பு


ADDED : ஏப் 03, 2024 06:49 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இங்குள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனியில் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.விழாவின்போது பக்தர்கள் தீச்சட்டி,கரும்பு தொட்டில், ஆயிரங்கண் பானை, முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிடுவர்.

இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 28ம் தேதி இரவு 10:50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா நாளை ஏப்.4ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தற்போதிலிருந்தே பக்தர்கள் வர துவங்கியுள்ளனர்.

5ம் தேதி இரவு 7: 10 மணிக்கு மின் அலங்கார தேரோட்டம் நடைபெற உள்ளது.6ம் தேதி காலை 7:40 மணிக்கு பால்குடம், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம், இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெற உள்ளது.

7ம் தேதி கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவை ஒட்டி மானாமதுரை, சிவகங்கை,இளையான்குடி, மதுரை, அருப்புக்கோட்டை,காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us