sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மடப்புரத்தில் முடங்கி கிடக்கும் குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரம்

/

மடப்புரத்தில் முடங்கி கிடக்கும் குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரம்

மடப்புரத்தில் முடங்கி கிடக்கும் குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரம்

மடப்புரத்தில் முடங்கி கிடக்கும் குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரம்


ADDED : செப் 10, 2024 05:32 AM

Google News

ADDED : செப் 10, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற கோயில் நகரமான மடப்புரம் ஊராட்சிக்கு வழங்கப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை பயன்படுத்தாததால் வீணாகி வருகின்றன.

திருப்புவனம் அருகே மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், வடகரை, எம்.ஜி.ஆர்., நகர், கலுங்குப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் இங்கு உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ஆடி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கேட்ட வரம் தருபவள் என்பதால் கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள் கோயில் முன் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அடிக்கடி மடப்புரத்தில் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தி கிடா வெட்டி விருந்து வைப்பார்கள். சின்னஞ்சிறிய ஊராட்சியில் நான்கு திருமண மண்டபங்கள் அமைந்திருப்பது பக்தர்களின் வருகையினால் தான், தினசரி டன் கணக்கில் குப்பை சேகரமாகின்றன.

இக்குப்பை அனைத்தும் வைகை ஆற்றில் கொட்டப்பட்டு தீவைப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அரசு உயர்நிலைப்பள்ளி, கோயில் ஆகியவற்றின் நடுவே குப்பைகளுக்கு தீ வைப்பதால் பலரும் சிரமம் அடைகின்றனர். இதனையடுத்து குப்பைகளை தரம் பிரித்து அழிப்பதற்காக ரூ.2.80 லட்சத்தில் இயந்திரங்கள் வாங்கினர்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 45 ஊராட்சிகளில் மடப்புரம் ஊராட்சிக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த இயந்திரங்கள் பல மாதங்களாக பயன்பாடின்றி சமுதாய கூடத்தில் முடங்கி கிடக்கின்றன. குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us