/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தந்தையும், மகனும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை: பிரேமலதா குற்றச்சாட்டு
/
தந்தையும், மகனும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை: பிரேமலதா குற்றச்சாட்டு
தந்தையும், மகனும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை: பிரேமலதா குற்றச்சாட்டு
தந்தையும், மகனும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை: பிரேமலதா குற்றச்சாட்டு
ADDED : ஏப் 12, 2024 10:51 PM

சிங்கம்புணரி : சிவகங்கை தொகுதிக்கு சிதம்பரமும், அவரது மகனும் 40 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேசினார்.
சிவகங்கை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து சிங்கம்புணரியில் பிரேமலதா பேசியதாவது:
இத்தொகுதியில் கடந்த 40 ஆண்டாக சிதம்பரமும், அவரது மகன் கார்த்தியும் எம்.பி., ஆக இருந்தும் மக்களுக்கு எதுவும் நல்லது செய்யவில்லை. சேவியர் தாஸ் வெற்றி பெற்றால் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி சேர்க்கப்படும். திண்டுக்கல் -- ராமேஸ்வரம் ரயில் பாதை திட்டம் வர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கலைக்கல்லூரி, பஸ் டிப்போ கொண்டுவரப்படும். தி.மு.க., ஆட்சியில் வறுமை, வேலையின்மை, லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பெண்களின்திட்டங்களை அரசு முடக்கிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

