/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை தினசரி லட்சார்ச்சனை மே 23ல் நிறைவு
/
பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை தினசரி லட்சார்ச்சனை மே 23ல் நிறைவு
பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை தினசரி லட்சார்ச்சனை மே 23ல் நிறைவு
பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை தினசரி லட்சார்ச்சனை மே 23ல் நிறைவு
ADDED : ஏப் 06, 2024 05:26 AM

பிள்ளையார்பட்டி, : பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி நேற்று 55வது நாளாக கோடி அர்ச்சனைப் பெருவிழா நடந்தது. 100 வது நாளான மே 23ல் விழா நிறைவு பெறுகிறது.
நகரத்தார் நவ கோயில்களில் ஒன்றான கற்பகவிநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாட்டு முறைகளாக கற்பக விநாயகருக்கு 1008 கலசாபிேஷகம், அதிருத்ர மகாயாகம் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது முதன் முறையாக உலக சகல உயிரினங்களின் நன்மை வேண்டி கோடி அர்ச்சனை பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
தினசரி காலை, மாலைகளில் லட்சார்ச்சனை 100 நாட்கள் நடைபெறும். தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தரம் குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் அர்ச்சனை நடக்கிறது.
நேற்று 55ம் நாளில், காலை கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜை நடந்து, பின்னர் மருதீசர் சன்னதி முன் மண்டபத்தில் எழுந்தருளிய உற்ஸவ விநாயகருக்கு காலை, மாலையில் சிவாச்சார்யார்களால் அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கோடி அர்ச்சனையில் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாட்டினை பி.க..ந.க.டிரஸ்ட் அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் செய்கின்றனர்.

