/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கச்சத்தீவு குறித்து பரிசீலனை: கார்த்தி
/
கச்சத்தீவு குறித்து பரிசீலனை: கார்த்தி
ADDED : ஏப் 20, 2024 05:14 AM
காரைக்குடி: புதிய ஆட்சி அமைந்த பின்பு கச்சத்தீவு குறித்து பரிசீலனை செய்வோம் என்று கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது: அரசாங்கம் தான் திட்டங்களை கொண்டு வர முடியும். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் என்னென்ன தெரிவித்தோமோ அத்தனையும் செய்வோம். கச்சத்தீவு பிரச்னையில் இரண்டு நாடுகள் தான் செட்டில்மென்ட் செய்வது குறித்து முடிவு செய்ய வேண்டும். புதிய அரசு அமைந்த பின்னர் கச்சத்தீவு குறித்து பரிசீலனை செய்வோம்.
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு தற்போது ஆபத்து இருக்கிறது. பா.ஜ., அதனை சிதைத்து கொண்டிருக்கிறது.
இந்தியா பன்முகத்தன்மையை காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இண்டியா கூட்டணி அமைந்தால் தான் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும். எங்களுடைய தேர்தல் அறிக்கையின் படி நாங்கள் நடந்து கொள்வோம். அதை அமல்படுத்துவோம், என்றார்.

