/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் பெண் பலி: லாரியை நிறுத்தாமல் சென்ற டிரைவருக்கு வலை
/
விபத்தில் பெண் பலி: லாரியை நிறுத்தாமல் சென்ற டிரைவருக்கு வலை
விபத்தில் பெண் பலி: லாரியை நிறுத்தாமல் சென்ற டிரைவருக்கு வலை
விபத்தில் பெண் பலி: லாரியை நிறுத்தாமல் சென்ற டிரைவருக்கு வலை
ADDED : ஜூலை 13, 2024 08:31 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்த செந்தில் மனைவி புவனேஸ்வரி, 45.
பக்கத்தை தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 48. இருவரும் நேற்று அதிகாலை சேலம் மார்-கெட்டில் கீரை விற்றுவிட்டு மொபட்டில் புறப்பட்டனர். கோவிந்-தராஜ் ஓட்டினார். அதிகாலை, 5:30 மணிக்கு, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் சந்தியூர் அருகே சென்றபோது, லாரி, மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சாலையில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த புவ-னேஸ்வரி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயி-ரிழந்தார். லேசான காயத்துடன் கோவிந்தராஜ் தப்பினார். லாரி குறித்து மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'விபத்தை ஏற்படுத்தி-விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவர் மீது ஜூலை, 1ல் அமல்ப-டுத்தப்பட்ட புது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிரைவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. விபத்துக்கு காரணமான லாரியை தேடுகிறோம்' என்றனர்.

