sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'டர்ப்' விளையாட்டு மைதானம் ஏற்காட்டில் முதல்முறை திறப்பு

/

'டர்ப்' விளையாட்டு மைதானம் ஏற்காட்டில் முதல்முறை திறப்பு

'டர்ப்' விளையாட்டு மைதானம் ஏற்காட்டில் முதல்முறை திறப்பு

'டர்ப்' விளையாட்டு மைதானம் ஏற்காட்டில் முதல்முறை திறப்பு


ADDED : ஜூலை 14, 2025 04:08 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டில் முதல்முறை, 'டர்ப் 1515' பெயரில், விளையாட்டு மைதான திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி திறந்து வைத்தார். மைதான உரி-மையாளர்களான, அருள் விக்னேஷ், செல்வகீதன், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் பிள்ளை, ரமேஷ், மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் அறிவுசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து அருள் விக்னேஷ் கூறியதாவது: வலை கட்டி அதற்குள் விளையாடக்கூடிய மைதானம் தான், 'டர்ப்'. சேலம் மாவட்டத்தில் உள்ள, 'டர்ப்' மைதானங்களில், இது பெரியது. கிரிக்கெட், கால்பந்து போன்றவை விளையாடும்படி வடிவமைக்-கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து விளையாடும்படி வாடகை நிர்ணயிக்கப்படும். திறப்பு விழாவை ஒட்டி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை மகிழ்விக்க, ஒரு அணியில், 7 பேர் விளையாடும்படி, 20 அணிகள் கொண்ட கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. உள்ளூர் இளைஞர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மைதானம் அருகே, சேலம் ஹில் ரோட்டரி கிளப் சார்பில், புதிதாக கட்டப்பட்ட, 'கன்வென்ஷன் ஹால்' அரங்-கத்தை, கூடுதல் அட்வகேட் ஜெனரல் சந்திரமோகன், ரோட்டரி முன்னாள் கவர்னர் செந்தில்குமார் திறந்து வைத்தனர். பின் கிளப் தலைவர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us