/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐயப்பன் கோவிலில் முகூர்த்த கம்பம் நடப்பட்டு மண்டல பூஜை துவக்கம்
/
ஐயப்பன் கோவிலில் முகூர்த்த கம்பம் நடப்பட்டு மண்டல பூஜை துவக்கம்
ஐயப்பன் கோவிலில் முகூர்த்த கம்பம் நடப்பட்டு மண்டல பூஜை துவக்கம்
ஐயப்பன் கோவிலில் முகூர்த்த கம்பம் நடப்பட்டு மண்டல பூஜை துவக்கம்
ADDED : நவ 11, 2025 02:02 AM
சேலம், சேலம், சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் நேற்று முகூர்த்த கம்பம் நடப்பட்டு மண்டல பூஜை துவங்கியது.
நடப்பாண்டுக்கான மண்டல பூஜை வரும், 17ல் துவங்கி, 2026 ஜன.,14 வரை நடக்கவுள்ளது. நேற்று முகூர்த்த கம்பம் நடும் விழா நடந்தது. பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் கம்பத்துக்கு அபி ேஷகம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனம் மற்றும் மாவிலை மலர்களால் அலங்கரித்து, கருவறை முன் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை சுற்றி வலம் வந்து, சரண கோஷங்கள் முழங்க நடப்பட்டது. ஐயப்பா டிரஸ்ட் தலைவர் நடராஜன், செயலாளர் சண்முகம், பொருளாளர் சரவணபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரும், 17 கார்த்திகை மாதப்பிறப்பன்று மண்டல பூஜை துவங்குகிறது. அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, மாலை அணிந்து விரதத்தை துவக்குவர். ஜன.,1 ஆங்கில புத்தாண்டு அன்று ஐயப்பன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலிப்பார்.
மகர ஜோதி திருவிழா ஜன.,7ல் கொடியேற்றத்துடன் துவங்கும். 13ல், ஐயப்பன் பள்ளி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி, 14 காலை ஆராட்டு விழா, மாலையில் கேரளா பஞ்ச வாத்தியங்களுடன் திருஆபரண பெட்டி ஊர்வலம், 6:30 மணிக்கு மகர ஜோதி தரிசனம், 6:45 மணிக்கு சுவாமி ஐயப்பன் ஆபரண தரிசனம் வெடி வழிபாடு நடத்தப்படும்.

